Monday, August 9, 2010

யானைக்கும் அடி சறுக்கும்.............



  • சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எளிதாக ஏமாந்து விடுவார்கள். அப்படித்தாங்க ஒரு சம்பவம் சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன்.

.ஒரு பெரிய பஞ்சாலை அதிபர், தன்னுடைய தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்கி, அதனை முதல் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற பேராவலினால், பழைய அதிகாரிகளையெல்லாம் நீக்கி விட்டு புதியவர்களை வேலையில் அமர்த்தினார். புதிய நிர்வாக அதிகாரி அன்று பதவி ஏற்றுக் கொண்டு , தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து தவறுகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற முடிவோடு உள்ளே நுழைந்தார்.

தன்னுடைய முதல் நாள் பதவி ஏற்பின் போது, உதவியாளர்கள் புடைசூழ, சுற்றிப் பார்ப்பதற்காக தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தார். அந்தப் பகுதியில் அனைவரும் ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ஒருவன் மட்டும் ஓரமாக, இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட அதிகாரி,

ஆகா, தன்னுடைய கண்டிப்பையும், தொழில் தத்துவத்தையும், மற்றவர்களுக்கு உணர்த்த அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு, வேலை செய்யாமல் நின்று கொண்டிருக்கும் அந்த இளைஞனை அருகில் அழைத்து,
நீ ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறாய்?", என்று கேட்டார்.
. "10000 ரூபாய்", என்று பதி்லளித்தான் அவன், கேள்விக்கான காரணம் புரியாமலே!

பையிலிருந்து 10000 ரூபாய் எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்து,
இந்தா, உன்னுடைய 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு இங்கிருந்து போய்விடு, திரும்பவும் வராதே ", என்று கூறினார்.
அந்த இளைஞன், ஆகாகா, தான் இன்று முழித்த முகம் மிக நல்ல முகம் போல என்று எண்ணி வியந்து, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு உடனே சென்று விட்டான்.
அந்த உயர் அதிகாரி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, மற்ற பணியாட்களைப் பார்த்து,.
" என்ன வேலை அவன் இங்கு செய்கிறான்", என்று கோபமாகக் கேட்டார்.
அவன் வடை கொடுக்க வந்தான் சார்", என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினான் அதில் ஒருவன்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!

7 comments: