Saturday, October 8, 2016

சோதிவடிவே! சுடரொளியே!





ஆயிரமாயிரம் திருநாமங்கள் அன்னையின்
ஆனந்தப்பாயிரம் இசைக்கோலங்கள் சங்கமம்
விண்ணிலேற்றும் விசைக்களிப்பின்  சாகசங்கள்
கண்ணிலூற்றும் காவியங்களின் ஒலியோவியங்கள்


எண்ணமெலாம் ஏதுமிலா பெருவெளியின்
விகல்பமிலா வித்தகச் சாரல்கள்
கள்ளமிலா களிப்புகளின் சாளரங்கள்
அன்னையின் மலர்பாதங்களின் சரணங்கள்

கருணைக்கடலின் பேரலையின் பரிணாமங்கள்
கற்பனைக்கெட்டா வானலையின் ஒளியோவியங்கள்
மலைகளின் பிரம்மாண்டத்தினூடே மடுவாய்
மலைத்துநிற்கும் மனக்கூட்டில் மாயாசாலங்கள்

மாசற்ற மனமும் தீதில்லா அறனும்
நீசமற்ற களிப்பும் வீணில்லா உழைப்பும்
இருளற்ற வாழ்வும் தளர்விலா உளமும்
எஞ்ஞான்றும் அருளும் அன்னையே!
நின்னையே நித்தம் தொழுதேற்றியே
பின்னையே பித்தம் மாய்த்துறவே
வினையாற்றும் மாதேவியே மாசற்ற
சோதிவடிவே! சுடரொளியே! சரணமம்மா!!



அன்னையின் அழகோவியத்திற்கு நன்றி.


No comments:

Post a Comment