Tuesday, December 6, 2016

சோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்




மூத்த பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் சித்தாந்தவாதி, நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், வழக்கறிஞர் திரு.சோ ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை (07/12/2016) நம்மைவிட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விசயம். எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி மக்களை தட்டியெழுப்பிய அரசியல் சிந்தனைவாதி, உயர்திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற நாடகம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவி அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் போலவே இந்த நாடகமும் மக்களிடையே பன்மடங்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ஆம் ஆண்டு வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தாரும், இரசிகர்களும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல கூத்தப்பெருமானை இறைஞ்சுகிறோம். 

No comments:

Post a Comment