Tuesday, April 11, 2017

தெய்வப்புலவர்!



1330 குறட்பாக்களை ஈரடியில் எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரே ஒரு நாலு வரி பாடல் எழுதியுள்ளார்.
images
அடியிற்கினியாளே அன்புடையாளே 
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- 
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு
அன்பு மனைவி இறந்தபின் அவர்தம் பிரிவைத் தாங்காமல் கலங்கி நின்றவர் , நேற்றிருந்தவர் இன்றில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்று பாடியவர், அதன்படி தம் மனைவியாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டியவர், அப்பிரிவைத் தாளாமல் இப்படி எழுதியுள்ளார்!
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
2. திருக்குறள் – 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
5. கற்பம் – 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் – 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
9. கற்ப குருநூல் – 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
12. முப்புக்குரு – 11 பாக்கள்
13. கவுன மணி – 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
15. குருநூல் – 51 பாக்கள்

No comments:

Post a Comment